எழுத்து எனப்படுவது…
எப்படி
அணுவே பொருளின் அடிப்படையோ,
செல்லே
உயிர்களின் அடிப்படையோ,
அப்படியே
எழுத்தே மொழியின் அடிப்படை.
தமிழ்
எழுத்துகள் மொத்தம் 247.
இவற்றுள்,
உயிரெழுத்து
12, மெய்யெழுத்து 18. இவையிரண்டும் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.
உயிரெழுத்துகள்
குறில், நெடில் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
அ, இ,
உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்.
ஆ, ஈ,
ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் நெடில்.
மெய்யெழுத்துகள்
வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.
க,ச,ட,த,ப,ற
ஆகிய எழுத்துகளுக்கு புள்ளிகளிட்டால் அவை வல்லினம்.
ங,ஞ,ண,ந,ம,ன
ஆகிய எழுத்துகளுக்குப் புள்ளிகளிட்டால் அவை மெல்லினம்.
ய,ர,ல,வ,ழ,ள
ஆகிய எழுத்துகளுக்குப் புள்ளிகளிட்டால் அவை இடையினம்.
உயிர்மெய்
எழுத்து 216, ஆய்த எழுத்து 1. இவையிரண்டும் சார்பெழுத்துகள் எனப்படுகின்றன.
எழுத்துகளை
ஒலிப்பின் அடிப்படையில் குறில், நெடில், ஒற்று எனப் பிரிப்பர்.
குற்றெழுத்து
ஒரு மாத்திரை அளவினது.
நெட்டெழுத்து
இரு மாத்திரை அளவினது.
ஒற்றெழுத்து
அரை மாத்திரை அளவினது.
சார்பெழுத்துகள்
பத்து வகைப்படும்.
அவையாவன,
1. உயிர்மெய்,
2. ஆய்தம்,
3. உயிரௌபெடை,
4. ஒற்றளபெடை,
5. குற்றியலுகரம்,
6. குற்றியலிகரம்,
7. ஐகாரக்
குறுக்கம்,
8. ஔகாரக்
குறுக்கம்,
9. மகரக்
குறுக்கம்,
10.
ஆய்தக் குறுக்கம்.
எழுத்துகள்
சேர்ந்து சொற்கள் பிறக்கின்றன. எழுத்துகள் இணைந்து உருவாகும் சொற்கள் பொருள் தர வேண்டும்.
சொற்களை
ஓரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூவெழுத்துச் சொற்கள், நான்கெழுத்துச் சொற்கள்
என எழுத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகை பிரிக்கலாம்.
பூ,
ஈ என்பன ஓரெழுத்துச் சொற்கள்.
கல்,
மண் என்பன ஈரெழுத்துச் சொற்கள்.
தமிழ்,
அழகு என்பன மூவெழுத்துச் சொற்கள்.
எழுத்து,
எண்ணம் என்பன நான்கெழுத்துச் சொற்கள்.
*****
No comments:
Post a Comment