ஒடுக்கப்பட்டோர் கல்வியின் பிதாமகர் பாவ்லோ பிரெய்ரெ!
பாவ்லோ
பிரெய்ரெ பிரேசிலியக் கல்வியாளர் ஆவார்.
இவர்
19 செப்டம்பர், 1921 இல் பிரேசிலில் பிறந்தார்.
1930
இல் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தில் வறுமையாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டவர்களுள்
பிரெய்ரெரும் ஒருவர். அதனால் வறுமை இவரது மிகச் சிறந்த அனுபவ பள்ளிக்கூடமாக ஆனது.
வறுமையின்
காரணமாக நான்கு ஆண்டுகள் பிரெய்ரெயின் கல்வி தடைபட்டது. இந்த நான்கு ஆண்டுகளும் அவர்
குடிசைவாழ் சிறுவர்களோடு நன்கு கலந்து பழகி கால்பந்து விளையாடினார். இக்காலகட்டமே அவருக்குக்
கல்வி குறித்து பலவிதமான புரிதல்களைப் பிற்காலத்தில் வழங்கியது.
பால்லோ
பிரெய்ரெ சட்டம் பயின்று வழக்கறிஞரானார். ஆனால் அவர் வழக்கறிஞர் பணியாற்றாமல், ஆசிரியர்
பணியாற்ற பெரிதும் விரும்பினார்.
பிரெய்ரெயின்
கருத்துப்படி கற்றல் என்பது வேறு, படிப்பு என்பது வேறு. அனுபவமே தமக்கு அறிவுக்கும்
வர்க்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்த்தியது என்கிறார்.
இன்றைய
கல்வி முறையை அவர் வங்கிக் கல்வி முறை என்று சாடுகிறார். வங்கியில் பணத்தை முதலீடு
செய்வது போல, ஆசிரியர் மாணவரின் தலையில் தகவல்களை இட்டு நிரப்புவதாகப் பிரெய்ரெ கருதுகிறார்.
1967
இல் Education as the Practice of Freedom என்ற நூலைப் பிரெய்ரெ வெளியிட்டார். இந்நூலில்
இன்றைய கல்வி முறையானது ‘எடுத்துச் சொல்லுதல்’ என்ற நோயால் அவதிப்படுவதாகப் பிரெய்ரெ
கூறுகிறார். பாடப்பொருளானது மாணவர்களின் அனுபவ அறிவிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அதனாலேயே
கல்வி என்பது வன்முறையாக மாறுகிறது என்பது பிரெய்ரெயின் கருத்தாகும்.
மேலும்
கல்விமுறையில் ஆசிரியர்கள் உயிர்க்கூறாகவும், மாணவர்கள் வெறுமனே பொருள்கூறாகவும் கருதப்படுகின்றனர்
என்றும் கூறுகிறார். இதனால் மாணவர்கள் அறிவைச் சேமித்து வைக்கும் கிடங்காய்க் கருதப்படுவதாகவும்
கூறுகிறார்.
இதற்கு
மாற்றாகக் கலந்துரையாடல் முறையைப் பாவ்லோ பிரெய்ரெ வலியுறுத்துகிறார். பிரச்சனை அடிப்படையிலான
கல்வி முறை இவரது சாராம்சமாகும். அதன்படி ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு அதற்கான
தீர்வை ஆசிரியர் மாணவர் இருவரும் இணைந்து தேடும் முறையை அவர் முன்னிருத்தினார்.
1968
இல் Pedagogy of the Oppressed என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் உலக அளவில் பல நாடுகளில்
தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பல நாடுகள் எழுத்தறிவுச் சட்டங்களை இயற்றின.
ஆனால் இந்நூல் அவரது நாடான பிரேசிலில் 1974 வரை தடை செய்யப்பட்ட நூலாக அந்நூல் இருந்தது
குறிப்பிடத்தக்கது.
ஐம்பதுக்கும்
மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்து ஒடுக்கப்பட்டோல் கல்வி மேம்படவும், கல்வி ஜனநாயகப்படவும்
பிரெய்ரெ துணை நின்றார்.
தனது
75 ஆவது வயதில் 2 மே, 1997 அன்று பிரெய்ரெ மாரடைப்பால் காலமானார். அவர் கல்வி குறித்து
எழுதியுள்ள 17 நூல்கள் அவரைக் காலம் முழுவதும் நினைவில் வைத்திருக்கும்.
*****
No comments:
Post a Comment