PFக்கும் ATM கார்டுகள்!
விரைவில்
வருங்கால வைப்பு நிதி எனப்படும் Provident Fundக்கும் பணஅட்டைகள் (ஏடிஎம் கார்டுகள்)
வர இருக்கின்றன. அநேகமாக இவ்வட்டைகள் மே அல்லது சூன் மாதத்திற்குள் வழக்கத்தில் வந்து
விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO
3.0 எனும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இத்திட்ட முடிவை அறிவித்துள்ளது.
இதன் நன்மைகளாவன,
1) இனி
பணத்தைப் பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டாம்.
2) அதிகாரிகளின்
ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டாம்.
3) வைப்பு
நிதி பணத்தைப் பெறுவதில் முன்பைப் போல கால தாமதம் ஏற்படாது.
4) 50 விழுக்காடு
பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
5) அவசர
பணத்தேவையை உடனடியாகத் தீர்த்துக் கொள்ளலாம்.
இருப்பினும்
எந்த நன்மையிலும் சில தீமைகள் இருக்கும்தானே. அப்படி இம்முறையினால் ஏற்படும் தீமைகளாவன,
1) அவசியமில்லாத
தேவைகளுக்குக் கூட இப்பணத்தை எடுத்து அவசர அவசரமாக எடுத்துப் பயன்படுத்த நேரிடலாம்.
2) வாழ்நாள்
முழுவதும் தொடர வேண்டிய சேமிப்பை இடையிடையே எடுத்து செலவழிக்க நேரிடலாம்.
3) வருங்கால
வைப்பு நிதி என்பதால் வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய கணிசமான நிதியின் அளவு இடையிடையே
எடுப்பதால் குறைய நெரிடலாம்.
4) சேமிப்பை
மறந்து நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாற இம்முறை வழிவகுக்கலாம்.
5) தொடர்
சேமிப்பின் மீதான அக்கறை குறையலாம்.
வருங்கால
வைப்பு நிதிக்கான பண அட்டையைச் சரியாகப் பயன்படுத்துவதும், அநாவசியமாகப் பயன்படுத்துவதும்
அதைப் பயன்படுத்துவோர் கையில்தான் இருக்கிறது.
முன்பு
வைப்புநிதியைப் பெறுவதில் இருந்த கட்டுபாடுகள், கால தாமதங்கள் ஆகியவை பணஅட்டையைப் பெறுவதால்
இருக்கப் போவதில்லை என்பதால் வைப்புநிதிக்கான பணஅட்டையைக் கவனமாகப் பயன்படுத்துவது
வருங்காலத்திற்கு நல்லது அல்லவா!
*****
No comments:
Post a Comment