Monday 23 March 2020

கொரோனாவால் சில வங்கிகளின் வேலை நேர மாற்றம்

கொரோனாவால் சில வங்கிகளின் வேலை நேர மாற்றம்

கொரோனா வைரஸ் பாதிப்பின் விளைவாக நாடு முழுவதும் உள்ள சில அரசு மற்றும் தனியார் வங்கிகளின் வேலை நேரம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தாக்கத்தின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய வங்கிச் சேவைகளும் ரத்தாகிறது.
சில வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றன.
காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வங்கி வேலை நேரத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள மற்றும் வழக்கமான வேலை நேரம் முழுமையும் செயல்படும் வங்கிகளின் விவரத்தைக் கீழே காணலாம்.
 எச்.டி.எஃப்.சி. வங்கி :
 வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)
எஸ்.பி.ஐ : 
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கனரா வங்கி : 
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி: 
வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)
ஆக்ஸிஸ் வங்கி:
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
 வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கோடக் மகிந்திரா வங்கி: 
வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)
பரோடா வங்கி: 
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.


No comments:

Post a Comment