Monday 9 March 2020

SSLC Hall Ticket பெற...

SSLC Hall Ticket பெற...


பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 27-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

இத்தேர்வில், தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 55,748 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.
            பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மார்ச் 11-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளதாக தோ்வுத்துறை அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்னும் இணையதளத்திலிருந்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
            இந்தப் பொதுத்தோ்வு பட்டியலில் மாணவர்களின் பெயா், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் பிழைகள் இருப்பின் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட தோ்வு மையக் கண்காணிப்பாளர்களை அணுகித் திருத்தங்கள் மேற்கொள்ள மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
            இந்தப் பொதுத் தேர்வில் பங்கேற்கவுள்ள தனித்தோ்வா்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சிட்டை நேரடியாக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணையதள முகவரிக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


No comments:

Post a Comment