வாழ்க்கைக்கான ரெப்ரெஷ் பட்டன்!
வாழ்க்கை
ஒரு ஹேங் ஆகிப் போன கம்ப்யூட்டர் போல இருக்கிறது பலருக்கு. அதற்கு ஒரு நல்ல ரெப்ரெஷ்
பட்டன் இல்லையா என்றால், அதுதான் தூக்கம்.
ஒரு
நல்ல தூக்கம் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வாய்ப்பை இரண்டு மடங்காக்குகிறது.
பெட்ஷீட்டுக்குள்
நுழைந்தும் தூக்கம் வரவில்லையா?
மல்லுக்கட்டாதீர்கள்.
தூக்கத்தைப்
பற்றி கவலைப்பட ஆரம்பித்தால், அதுவே ஒரு நெகட்டிவ் அசோசியேஷன் ஆகிவிடும்.
ஏன்
தூக்கம் வரவில்லை? கொஞ்சம் அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
படுக்கையில்
விழுந்ததும் போனை எடுத்து நோண்டுவது நம்மூர் தேசிய வியாதியாகிவிட்டது. பாதித் தூக்கத்தில்
ஒரு கண் மூடியிருக்கும் நிலையிலும் லைக் போடுபவர்கள் இங்கே அதிகம். ஆனால், இந்த சின்னத்
திரை உங்கள் மூளைக்குள் என்ன மாதிரியான ரசாயனக் கலவரத்தை உண்டாக்குகிறது தெரியுமா?
நம்
மூளை ஒரு பழைய காலத்து கடிகாரம். சூரிய வெளிச்சத்தில் இருக்கும் ப்ளூ லைட் கண்ணில்
பட்டால், மூளை மெலடோனின் என்கிற தூக்க ஹார்மோனை நிறுத்திவிட்டு, டேய் எழுந்துரு, விடிஞ்சிருச்சு!
என்று அலாரம் அடிக்கும். இப்போது உங்கள் போன் திரையும் அதே ப்ளூ லைட்டை வீசுகிறது.
விளைவு? உங்கள் பாடி கிளாக் குழம்பிப்போய், தூக்கம் வராமல் தவிக்கிறது.
பகலில்
ஒரு வேலையில் மூழ்கிப் போவது நல்லது. ஆனால், இரவில் இன்னும் ஒரே ஒரு ரீல், இன்னும்
ஒரே ஒரு லெவல் கேம், என்று ஆரம்பித்தால், மூளைக்குள் டோபமைன் எகிறும். இதற்குப் பெயர்தான்
புளோ ஸ்டேட். இது ஒரு ஸ்வீட் பாய்சன். படுக்கையில் லைட்டை அணைக்க விடாமல் உங்களை ஆன்லைனில்
வைத்திருக்கும் கில்லர் இது!
ஒருவழியாக
போனை வைத்துவிட்டுத் தூங்கினாலும், பக்கத்தில் இருக்கும் போன் அதிர்ந்தாலோ அல்லது ஒரு
மெசேஜ் நோட்டிபிகேஷன் வந்தாலோ உங்கள் தூக்கத்தின் சைக்கிள் உடைகிறது. ஆழ்ந்த தூக்கத்தின்
கடைசி நிலைக்குப் போகும் முன் நீங்கள் விழித்தால், சிஸ்டம் மீண்டும் ரீபூட் ஆகி முதலிலிருந்து
ஆரம்பிக்க வேண்டும். காலையில் எழும்போது டயர்டாக இருப்பதற்கு இதுவே காரணம். ஸோ, போனை
அவுட் ஆப் ஏரியாவுக்குள் தள்ளுங்கள்.
வாழ்க்கை
என்பது ஒரு முடிவில்லாத ஸ்க்ரோலிங் கிடையாது. போன் என்பது ஒரு கருவிதான், அதுவே உங்கள்
எஜமானன் ஆகிவிடக் கூடாது.
தூக்கம்
வரலை சார், என்று சொல்லிக்கொண்டே போன் பார்ப்பது, நெருப்பு சுடுது என்று சொல்லிக்கொண்டே
கையை நெருப்பில் வைப்பதற்குச் சமம்.
இரவு
படுக்கைக்குப் போகும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே போனை ஆப் செய்யுங்கள். அல்லது,
போனைத் தூரத்தில் வையுங்கள். உங்கள் கண்கள் நாளை காலை உங்களை நன்றியோடு பார்க்கும்.
இதற்கு
மேலும் தூக்கம் வரவில்லை என்றால் மெல்ல எழுந்து வேறு அறைக்குச் செல்லுங்கள். ஏதாவது
ரிலாக்ஸான காரியம் செய்யுங்கள். நிஜமாகவே கண்கள் சொருகும்போது மட்டும் பெட்டுக்குத்
திரும்புங்கள். பெட் என்றால் தூக்கம் மட்டும்தான் என்கிற ஒரு கண்டிஷனிங்கை மூளைக்குக்
கொடுங்கள்.
தூக்கத்திற்கு
ஒரு வெல்கம் அட்ரஸ் கொடுக்க சில ஐடியாக்கள் உள்ளன.
ஒரு
சின்ன லைட் ஸ்நாக்ஸ்.
சுடுதண்ணீர்
குளியல்.
நாளைய
வேலையைப் பட்டியலிடுவது. இதனால் மூளை அப்பாடா, இதெல்லாம் பேப்பரில் இருக்கிறது, நாம்
ஞாபகம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை என்று ரிலாக்ஸ் ஆகும்.
ஒரு
ஐந்து நிமிடம் தியானம் அல்லது ஒரு புத்தகத்தின் ஒரு அத்தியாயம். புத்தகம் படித்தால்
ஸ்ட்ரெஸ் லெவல் குறைகிறதாம். அல்சைமர் வராமலும் இது தடுக்கிறதாம்.
கொஞ்சம்
பொடி நடை கூட உதவும்.
வாழ்க்கை
என்பது ஒரு முடிவில்லாத லூப் கிடையாது என்பதை நாம் முன்பே அறிந்ததுதான். மூளை என்பது
ஒரு ஸ்டோரேஜ் டிவைஸ் மட்டுமல்ல, அது ஒரு பிராசஸர். அதற்கு அதிக லோடு கொடுக்காதீர்கள்.
புதிய பழக்கங்களை உருவாக்கப் பொறுமை தேவை.
இன்று
இரவு படுக்கும்போது, ஒரு ஐந்து நிமிடம் நாளைய வேலைகளை ஒரு டைரியில் எழுதி வைத்துவிட்டுப்
படுங்கள். உங்கள் மூளையில் இருக்கும் ரேம் காலியாகி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவிடும்.
நாளை காலை நீங்கள் ஒரு புது மனிதராக எழுவீர்கள். ஆல் தி பெஸ்ட்!
*****

No comments:
Post a Comment