Thursday 8 September 2022

இன்றைய செய்திகள் – 09.09.2022 (வெள்ளி)

இன்றைய செய்திகள் – 09.09.2022 (வெள்ளி)

புதிய நாடாளுமன்ற வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகளில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாணவி முதலிடத்தையும், டெல்லி மாணவி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் இரண்டாவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்துள்ளது. சென்ற ஆண்டு நீட் தேர்ச்சி பட்டியலில் 23 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு 28 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

நீட் தேர்வு தோல்வி முடிவால் திருமுல்லைவாயலைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுயிரைத் தானே நீத்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்குக் கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

No comments:

Post a Comment