Wednesday 7 September 2022

இன்றைய செய்திகள் – 08.09.2022 (வியாழன்)

இன்றைய செய்திகள் – 08.09.2022 (வியாழன்)

இன்று ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கி 600 நாள் நிறைவுற்ற நிலையில் நாடு முழுவதும் 214 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சூலா பிரேவர்மென் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கன மழையால் வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு நகரத்தில் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது.

மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

தொடர் மழையினால் ஏற்பட்ட பாதிப்பால் மல்லிகை பூவின் விலை அதிகரித்துக் கிலோ ஒன்றுக்கு ரூ. 1400 க்கு விற்கப்படுகிறது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment