Thursday 1 September 2022

இன்றைய செய்திகள் – 02.09.2022 (வெள்ளி)

இன்றைய செய்திகள் – 02.09.2022 (வெள்ளி)

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தடையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடும்ப தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இதுவரை ஒன்றரை கோடி வாக்காளர்களுக்கு மேல் விண்ணப்பித்துள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலை பவுனுக்கு 352 ரூபாய் வரை குறைந்துள்ளதால் ஆபரணத் தங்கத்தின் விற்பனை விலை பவுனுக்கு 38000 ரூபாய்க்குக் கீழ் இறங்கியது.

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் 28 சதவீதம் அதிகரித்து 1.43 லட்சம் கோடியை எட்டியது.

தொடர்ந்து 17 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment