Thursday 29 September 2022

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்களுக்கு அந்நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்த ஆவலை உண்டாக்கும். அந்நாவலின் பல பாத்திரங்கள் பலருக்கு மிகுந்த ஆதர்சம் தரக் கூடியவையும் கூட.

கல்கி எழுதிய நாவல் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது. நாவலில் இடம்பெற்ற பாத்திரங்களில் நடிக்க இருக்கும் நடிகர்களைப் பற்றி அறியும் ஆர்வம் நம்மில் பலருக்கு இருக்கும்.

பொன்னியின் செல்வன் நாவலின் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை அறிய விரும்புபவர்களுக்காக இந்தப் பட்டியல்.

பொன்னியின் செல்வன் படத்தின் பாத்திரங்களாகப் பின்வரும் நடிகர்கள் நடிக்கின்றனர்.

சோழர் குல பட்டத்து இளவரசரும் அருள்மொழிவர்மனின் அண்ணனுமான ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம்.

ஆதித்த கரிகாலனின் தம்பியும் மகாராஜா ராஜராஜ சோழர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி.

வீரமும் துணிச்சலும் மிகுந்த வாணர்குல இளவரசன் வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி.

செம்பியன் மாதேவி மற்றும் மான்ய மந்திரிக்காக வேலை செய்பவனான ஆழ்வார்க்கடியான் நம்பியாக (திருமலையப்பனாக) ஜெயராம்.

சோழ இளவரசி மற்றும் சந்தரசோழ சக்கரவர்த்தியின் மகளான இளைய பிராட்டி என்னும் குந்தவை பிராட்டியாராக திரிசா.

வெட்கமிகுந்தவளான கொடும்பாளூர் இளவரசி என்றழைக்கப்படும் வானதியாக சோபிதா துலிபாலா.

கோடிக்கரையில் வாழும் படகோட்டிப் பெண்ணானச் சமுத்திரக்குமாரி என்னும் பூங்குழலியாக ஐஸ்வர்யா இலட்சுமி.

ஆதித்த கரிகாலனின் நண்பனானப் பல்லவ வம்சாவழியில் வரும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு.

பூக்கார வாலிபனான சேந்தன் அமுதனாக அஸ்வின் ககுமனு.

போரிட்டுப்பெற்ற 64 காயங்களுக்காகவும் வீரத்துக்காகவும் போற்றப்படும் பழுவேட்டரையர் குலத்திலிருந்து வந்த சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்.

சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதி சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன்.

ஈழத்துப் படையை நடத்திய சோழப் பேரரசின் சேனாதிபதி மற்றும் வானதியின் மாமனான பூதி விக்கிரம கேசரியாக பிரபு.

அழகினால் சுந்தரர் என்று பெயர்பெற்ற சோழப் பேரரசர் பராந்தக சோழனாக பிரகாஷ் ராஜ்.

சைவராக வளர்க்கப்பட்ட செம்பியன் மகாதேவியின் மகன் மதுராந்தகத் தேவராக (மறுபெயர் அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்) ரகுமான்.

இளைய சம்புவரையன் என்னும் கடம்பூர் இளவரசனான கந்தமாறனாக அஸ்வின் ராவ்.

சம்புவரையர் குடும்பத்திலிருந்து வந்த கடம்பூர்ச் சிற்றரசர் கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி.

சுந்தர சோழரின் மாமனார் மற்றும் அவரது குழந்தைகளுக்குத் தாய்வழிப் பாட்டனான மிலாடுடையார் எனும் திருக்கோயிலூர் மலையமானாக லால்.

விஜயாலய சோழராக விஜயகுமார்.

கந்தராதித்தரின் மனைவி மற்றும் உத்தம சோழரின் தாயான பெரிய பிராட்டி எனும் செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா.

வீரபாண்டியனாக நாசர்.

பொன்னியின் செல்வன் புதினத்தின் எதிர்நாயகன் ரவிதாசனாக கிஷோர்.

தற்போது கும்பகோணம் எனப்படும் குடந்தை நகரத்து சோதிடரான குடந்தை சோதிடராக மோகன் ராமன்.

நந்தினியின் பணிப்பெண் வாசுகியாக வினோதினி வைத்தியநாதன்.

பாண்டிய இளவரசனாக மாஸ்டர் ராகவன்.

இராஷ்டிரகூட அரசராக பாபு ஆண்ட்டனி.

காலமுகராக மகரந்த் டெஷ்பாண்டே.

*****

No comments:

Post a Comment