Friday, 24 July 2026

ஆவிகளின் அணிவகுப்பு!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் - 31

ஆவிகளின் அணிவகுப்பு!

1944 ஆம் வருடம்.

கடிகாரத்தின் வினாடி முள் நகர மறுத்தது. இரவு மணி 2:15.

மெட்ராஸ் ஜிம்கானா கிளப்பின் லைப்ரரி அறையில் பேன் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. எதிரே உடலெங்கும் வியர்க்க, பதற்றத்தில் நடுகங்களுக்கிடையே உட்கார்ந்திருந்தார் கமாண்டர் சுப்பிரமணியம். அவருக்கு எதிரே டாக்டர் ராகவன்.

"ராகவா, நான் சொல்றத நீ நம்ப மாட்ட. சைக்காலஜிக்கலா இது மாஸ் ஹலூசினேஷன்னு நீ ஈஸியா சொல்லிருவ. ஆனா…"

"சுப்பிரமணியம், பர்ஸ்ட் ரிலாக்ஸ்," என்றான் ராகவன். அவரே தொடர்ந்தார், "இப்போ ரெண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கு. பர்மா பார்டர்ல ஜப்பான்காரன் பிச்சியெடுக்கறான். நீங்க ஆளுங்களை இழந்துட்டு இங்க மெட்ராஸுக்கு வந்திருக்கீங்க. ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா மூளை என்ன வேணா பிம்பத்தை உருவாக்கும். அதான் சயின்ஸ்."

"சயின்ஸாவது மண்ணாங்கட்டியாவது!" சுப்பிரமணியம் கத்தினார். "அன்னைக்கு இரவு பர்மா காட்டில் நடந்தது என்ன தெரியுமா?"

ராகவன் சுப்பிரமணியத்தின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு, தன் டிரேட்மார்க் புன்னகையோடு பார்த்தார். "சொல்லுங்க, கேட்டுடுவோம்."

"மழை கொட்டிக் கொண்டிருந்தது. காட்டின் அடர்த்தி வெளிச்சத்தை முற்றிலும் விழுங்கியிருந்தது. என்னையும் சேர்த்து பிரிட்டிஷ் இந்தியப் படையில் எஞ்சியிருந்தது வெறும் 18 வீரர்கள் மட்டுமே. எதிரே ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜப்பானியப் படைப்பிரிவு எங்களை வளைத்துவிட்டது. எங்ககிட்ட அம்யூனிஷன் தீர்ந்து போச்சு ராகவன். சாகறதைத் தவிர வேற வழி இல்லை. நாங்க எல்லாரும் துப்பாக்கியைக் கீழே வச்சிட்டு எங்க குலதெய்வத்தை கும்பிட ஆரம்பிச்சிட்டோம்."

"அப்புறம்?"

"திடீர்னு காட்டுக்குள் ஓர் அசாதாரணமான அமைதி. மழை நின்ன மாதிரி ஒரு பீலிங். அப்புறம் ஓர் ஒளி. நிலா வெளிச்சத்தை விட ஆயிரம் மடங்கு அதிகமா ஒரு நீல நிற வெளிச்சம் மரங்களுக்கு நடுவுல பாய்ஞ்சுது."

ராகவன் நிமிர்ந்து உட்கார்ந்தார். "பிலமென்ட் எஃபெக்ட்டா? அல்லது ஏதேனும் பாஸ்பரஸ் பாம்?"

"இல்லை!" சுப்பிரமணியத்தின் குரல் நடுங்கியது. "அந்த வெளிச்சத்துக்குள்ள இருந்து உருவங்கள் வெளிப்பட்டன. ஒண்ணு ரெண்டு இல்லை, நூற்றுக்கணக்கான உருவங்கள். அவங்க உடம்புல சாதாரண துணி இல்லை. 1857 சிப்பாய் கலகத்துல செத்துப் போன இந்திய வீரர்களின் சீருடை! கையில பழைய ரகத் துப்பாக்கிகள். அவங்க உடம்பு வழியா மரம், செடி எல்லாம் ஊடுருவித் தெரிஞ்சது!"

"வாட்?"

"ஆமா! அந்த ஆவிகள் முன்னாடி நகர்ந்து போனது. ஜப்பானிய வீரர்கள் அலறி அடிச்சுட்டு துப்பாக்கியால் சுட்டாங்க. ஆனா குண்டுகள் அந்த ஆவிகள் உடம்பைத் தாண்டிப் போய் மரத்துல பாய்ஞ்சுது. அடுத்த பத்தே நிமிஷம். எந்த ஆயுதமும் இல்லாம, வெறும் அந்த ஆவிகளின் பிரசன்னத்தாலயே ஜப்பானியப் படை பயந்து, ஒருத்தரையொருத்தர் மிதிச்சுட்டு ஓடிப்போய்ட்டாங்க. அத்தனை பேரையும் அந்த ஆவிகள் துரத்திட்டுப் போய் காட்டுக்குள்ள மறைஞ்சுது."

ராகவன் அமைதியாக யோசித்தார். "எல்லாம் தீவிரமான மரண பயத்தில் மூளை உருவாக்கும் கூட்டு பிரமை"

"அதுக்கு அப்புறம் அந்தச் சம்பவத்தால அன்னைக்கு செத்துப் போன 30 ஜப்பானிய பிணங்களை நான் என் கண்ணால பார்த்தேனே ராகவன்? அவங்க உடம்புல ஒரு காயமும் இல்லை. பயத்துல இதயமே வெடிச்சு செத்திருந்தாங்க! அது எப்படி?"

ராகவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்தார்.

"நீங்க சொல்றது சுவாரஸ்யமா இருக்கு சுப்பிரமணியம். நோட் பண்ணிக்கிறேன். ஆனா சயின்ஸ்ல இன்ப்ராஸவுண்ட் ஒன்னு இருக்கு. 20 ஹெர்ட்ஸ்க்கு கீழே உள்ள சப்தம். அதை மனுஷனால கேட்க முடியாது. ஆனா மூளை உணரும். அது பயத்தை, மாய பிம்பங்களை, ஏன், ஹார்ட் அட்டாக்கைக் கூட உண்டாக்கும். பர்மா காட்டுல இருந்த ஏதோ ஓர் எரிமலை வாயு அல்லது நில அதிர்வு அந்தச் சப்தத்தை உருவாக்கியிருக்கலாம்."

சுப்பிரமணியம் விரக்தியாகச் சிரித்தார். "நீ நம்ப மாட்ட ராகவன். எனக்குத் தெரியும்."

"சரி, அந்த ஆவிகள் உங்ககிட்ட ஏதாச்சும் பேசுச்சா?"

சுப்பிரமணியம் ராகவனின் கண்களை நேராகப் பார்த்தார்.

"ஒரே ஒரு வார்த்தை ராகவன். அந்தப் படையின் முன்னாடி நின்ன தளபதி உருவம் என்னை திரும்பிப் பார்த்து, நாம்ம மெட்ராஸில் சந்திப்போம்னு தமிழ்ல சொன்னுச்சு."

லைப்ரரியின் மின்சாரம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது.

அறை இருளில் மூழ்கியது.

ஜிம்கானா கிளப்பின் ஜன்னல்கள் பலமாக அதிரத் தொடங்கின. மெட்ராஸில் மழை பெய்யாத அந்த நள்ளிரவில், ஜன்னலுக்கு வெளியே ஒரு நீல நிற ஒளி படர ஆரம்பித்தது.

ராகவன் டார்ச் லைட்டை அடித்தார்.

சுப்பிரமணியத்தின் இருக்கை காலியாக இருந்தது!

ஆனால், அறையின் மூலையில்,. பழைய 1857 ஆம் ஆண்டின் சீருடை அணிந்த ஒரு கம்பீரமான உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் கண்கள் நிலா வெளிச்சத்தைப் போல மின்னின.

ராகவனின் கையில் இருந்த டார்ச் லைட் நடுக்கத்தில் கீழே விழுந்தது.

அந்த உருவம் ராகவனைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தது.

"டாக்டர் ராகவன்! சயின்ஸ் எல்லாத்துக்கும் பதில் சொல்லிரும்னு நினைக்காதீங்க!"

அவ்வளவுதான்.

மின்சாரம் மீண்டும் வந்தது.

அறையில் ராகவன் மட்டுமே தனியாக நின்று கொண்டிருந்தார்.

வெளியேயிருந்து மிலிட்டரி பூட்ஸ் சப்தம் டக் டக் என மொத்த மெட்ராஸ் நகரத்தின் வான்வெளியிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது!

சுப்பிரமணியம் சொன்னது உண்மைதானா?

இப்போது அதைச் சொன்ன சுப்பிரமணியம் எங்கே?

ராகவனுக்கு நடந்த அமானுஷ்யங்கள் நிஜம்தானா?

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment